செவ்வாய், 10 ஜூன், 2014

வாராஹி



வராகி
திருமாலின் வராக அவதார அம்சம் உடையவள். கறுப்புப் பட்டாடை உடுத்தியவள். பன்றி முகம் உடையவள். மிக்க செல்வமும் அணிகலன் பூண்ட அழகிய மார்பும் உடையவள். பாதங்களில் நூபுரம் அணிந்தவள். கலப்பை, முசலம், வரதம், அபயம் அமைந்த நாற்கரத்தினள். கருநிறம் உடையவள்.
வாராஹி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் அம்சமாக அவதரித்தவள் - வாராஹி. வராக (பன்றி) முகமும் - நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களை அபய - வரதமாகவும்; மேல் வலக்கரத்தில் தண்டமும் - இடக்கரத்தில் கலப்பையும் கொண்டவள். கருப்பு நிறமுடைய ஆடையை உடுத்திக் கொண்டிருப்பவள். கிரீட மகுடம் தரித்து - சிம்ம வாஹனத்தில் அமர்ந்திருப்பவள்.
இவள் அசுரன், உலகைத் தூக்கிக் கொண்டு கடலுள் ஒழிந்தபோது, வராக அவதார மெடுத்து மீட்டுக் கொண்டு வந்தவள். எனவே, இவளை வழிபட்டால், எதிரிகளை அழித்து வெற்றி அடையலாம். பெண்கள் உபாசித்தால் கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதற்குத் தீங்கு நேரும்போது, எதிர்த்து நின்று காத்தருள்வாள்!
வராகி பாடல்: கரியின் தோல் திருமேனியிற் கவினுறப் போர்த்தி
அரியின் கண்ணடி அணிதரும் அண்ணலைச் சத்தி
புரியின் மேவிய பொருளினை வராகி பூசித்தாள்
தெரியின் மேம்படு வரமெலாம் சிறப்புறப் பெற்றாள்.
வாராகி விஷ்ணு அம்சி - பூஜா
ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - வாராகி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - வம் - வாராகி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம:
காயத்ரி: ஓம் - மஹிசத்வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வராஹி ப்ரசோதயாத்
தியான ஸ்லோகம்: ஏக வக்த்ராம் த்விநேத்ராம்ச
சதுர்புஜ சமன் விதாம்;
க்ருஷ்ணாம்பர தராம், தேவிம்
வராஹ சக்ர ஸம்யுதாம்;
ஹசலமுஸல ஹஸ்தாம்
தாம் வரா பயகராம்புஜாம்;
ஸிம்ஹ வாஹ ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்;
ஸர் வாலங்கார ஸம்பன்னாம்,
வாராஹிம் பூஜயேத்புத
மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஸ்ரீம் - வம் - வாராகியை - நம :
அர்ச்சனை: ஓம் வாராஹ்யை நம
ஓம் வாமந்யை நம
ஓம் வாமாயை நம
ஓம் வாசவ்யை நம
ஓம் பாலாயை நம
ஓம் பாமாயை நம
ஓம் பாசாயை நம
ஓம் பயாநகாயை நம
ஓம் தன்யாயை நம
ஓம் தராயை நம
ஓம் தபஸ்விந்யை நம
ஓம் தமாயை நம
ஓம் கர்வாயை நம
ஓம் கபாலின்யை நம
ஓம் கதாதாரிண்யை நம
ஓம் கலாரூபிண்யை நம
ஓம் மதுபாயை நம
ஓம் மங்கலாயை நம
ஓம் மருதாந்யை நம
ஓம் மகீலாயை நம
ஓம் ராதாயை நம
ஓம் ராகாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ரஜன்யை நம
ஓம் ரூஜாயை நம
ஓம் ரூபவத்யை நம
ஓம் ருத்ராண்யை நம
ஓம் ரூபலாவண்யை நம
ஓம் துர்வாசாயை நம
ஓம் துர்க்ககாயை நம
ஓம் துர்ப்ரகம்யயை நம
ஓம் துர்க்காயை நம
ஓம் குப்ஜாயை நம
ஓம் குணபாசநாயை நம
ஓம் குர்விண்யை நம
ஓம் குருதர்யை நம
ஓம் கோநாயை நம
ஓம் கோரகசாயை நம
ஓம் கோஷ்ட்யை நம
ஓம் கோசிவாயை நம
ஓம் பேருண்டாயை நம
ஓம் நிஷ்களங்காயை நம
ஓம் நிஷ்பரிக்ரகாயை நம
ஓம் நிஷ்கலாயை நம
ஓம் நீலலோகிதாயை நம
ஓம் கிருஷ்ணமூர்த்தாயை நம
ஓம் கிருஷ்ணாயை நம
ஓம் கிருஷ்ணவல்லபாயை நம
ஓம் கிருஷ்ணாம்பராயை நம
ஓம் சதுர்வேதரூபிண்யை நம
ஓம் சண்டப்ரஹரணாயை நம
ஓம் சனத்யாயை நம
ஓம் சந்தோபத்ந்யை நம
ஓம் ப்ராமிண்யை நம
ஓம் ப்ராமாயை நம
ஓம் ப்ரமண்யை நம
ஓம் ப்ரமர்யை நம
ஓம் அஜராயை நம
ஓம் அஹங்காராயை நம
ஓம் அக்நிஷ்டோமாயை நம
ஓம் அஷ்வமேதாயை நம
ஓம் விதாயாயை நம
ஓம் விபாவசேயை நம
ஓம் விநகாயை நம
ஓம் விஷ்வரூபிண்யை நம
ஓம் சபா ரூபிண்யை நம
ஓம் பக்ஷ ரூபிண்யை நம
ஓம் அகோர ரூபிண்யை நம
ஓம் த்ருடி ரூபிண்யை நம
ஓம் ரமண்யை நம
ஓம் ரங்கன்யை நம
ஓம் ரஜ்ஜன்யை நம
ஓம் ரண பண்டிதாயை நம
ஓம் வ்ருசப்ரியாயை நம
ஓம் வ்ருசாவர்தாயை நம
ஓம் வ்ருசபர்வாயை நம
ஓம் வ்ருசாக்ருத்யை நம
ஓம் நிர்குணாயை நம
ஓம் நிர்மலாயை நம
ஓம் நித்யாயை நம
ஓம் பராயை நம
ஓம் பாராயை நம
ஓம் பரமாத்னேயை நம
ஓம் பரந்தபாயை நம
ஓம் தோஷநாசின்யை நம
ஓம் வியாதிநாசின்யை நம
ஓம் விக்ரநாசின்யை நம
ஓம் பாபநாசின்யை நம
ஓம் மோகபகாயை நம
ஓம் மதாபகாயை நம
ஓம் மலா பகாயை நம
ஓம் மூர்ச்சா பகாயை  நம
ஓம் மகா கர்ப்பாயை நம
ஓம் விஷ்வ கர்ப்பாயை நம
ஓம் மாலிண்யை நம
ஓம் த்யான பராயை நம
ஓம் ரேவாயை நம
ஓம் உதும்பராயை நம
ஓம் தீர்த்தாயை நம
ஓம் பாதாலகாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் வசூதாயை நம
ஓம் வைதேஹ்யை நம
ஓம் நிராமயாயை நம
ஓம் தயாலயாயை நம
ஓம் ஆநந்தரூபாயை நம
ஓம் விஷ்ணுவல்லபாயை நம
ஓம் விஷ்ணுஅம்சியை நம
ஸ்ரீ வாராகி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.
பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.
துதி: க்ரூஹீதோக்ர மகாசக்ரே
தம்ஸ்ட்ரோத் த்ருத வசுந்தரே
வராஹ ரூபிணி
நாராயணி நமோஸ்துதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக