வெள்ளி, 27 மார்ச், 2015

ஹோரை பலன்



ஹோரை கிரகங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு:
1. மனிதன் காலத்தை சார்ந்தே அவனது ஒவ்வொரு நொடிப்பொழுதும் கழிகிறது!
2. அவனது ஒவ்வொரு இயக்கங்களும், நிகழ்வுகளும் ஹோரா கிரகத்தின் தன்மையை பிரதிபலிபபதாக இருக்கிறது.
3. ஹோரா கிரகத்தின் "குணங்கள், செயல்பாடுகள்" என்னவோ? அதுவே அந்த 1 மணி நேர ஹோரையில் வெளிப்பட்டு விளங்குகிறது!
4. மனிதனது மனநிலைகளுக்கும், சூழ்நிலைகளின் தன்மைகளுக்கும், ஹோரா கிரகங்களுக்கும் தொடர்பு இருக்கிறது!
5. ஹோரா கிரகமும், வார கிரகமும் இணைந்தே நிகழ்வுகளை, சம்பவங்களை (Events) தோற்றுவிக்கின்றன!!
6. ஹோரா கிரகத்தின் காரக நிகழ்வுகளை தவிர்த்து பிரிதொன்றும் அந்த ஹோரை முடியும் வரை நிகழவே நிகழாது!
7. கோள்களின் கதிர் அலைகள் காற்றினில் கலந்து மனிதனது, மூச்சுக் காற்றாகிய சுவாசத்தின் மூலம் மனிதனை தொடர்பு கொள்கிறது!

மனிதனை இயக்குவது சுவாசிக்கும் காற்று
1. காற்றினை சுவாசிக்கின்ற எந்த ஒரு மனிதனும் கோள்களின் இயக்கத்திற்கு ஈகொடுத்தே ஆக வேண்டும்!
2. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3 வேளை உணவு உண்கிறான்!
3. 6 லிட்டர் தண்ணீர் குடிக்கிறான்!
4. ஆனால், ஒரு நாளைக்கு 21,600 தவவைக்கும் மேலான எண்ணிக்கையில் சுவாசிக்கிறான்!!
5. எனவே, மனிதன் கோள்களின் கதிர் அலை (Ray's)கள் நிரம்பியுள்ள, காற்றினை சதா மூக்கினால் சுவாசித்த வண்ணம் இருக்கின்றான்!
6. "மனிதனை" இயக்குவது மனம்!
7. மனதினை இயக்குவது சுவாசிக்கும் காற்று!
8. காற்றினை இயக்குவது காலம்!
9. காலத்தினை இயக்குவது கால கிரகங்கள்
10. கிரகங்களை இயக்குவது "பரம்பொருள்!"
11. பரம்பொருளுக்கும், மனிதனுக்கும் இடையில் எத்தனை விதவிதமான பாலங்கள் பார்த்தீர்களா? அன்பர்களே!

ஹோரா கிரகத்தின் வலிமை நிர்ணயம்:
1. காலத்தினை வருடம், மாதம், வாரம், ஹோரை என்று நான்கு பெரும் பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது!
2. இதில் வருடாதிபதியின் பலம் 25% ஆகும்!
3. மாத அதிபதியின் பலம் 50%.
4. வார அதிபதியின் பலம் 75%.
5. ஹோரா அதிபதியின் பலம் 100%.
6. எனவே வருடாதிபதி, மாதாதிபதி, வாராதிபதி, ஹோராதிபதி ஆகிய நால்வரில் ஹோரா அதிபதியே அதிபலம் பெற்று விளங்குகிறார்.
7. இதிலிருந்து ஹோரைதான் அதிக வலிமை பொருந்தியது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்!

வருட மாத வார ஹோரா
அதிபதி 25% அதிபதி 50% அதிபதி 75% அதிபதி 100%

8. ஹோரா கிரகம் தான் 1 மணி நேரத்தின் CM போன்றவர். அவர் வைப்பதுதான் சட்டம்!!
9. ஒரு நாள் முதல்வர் போன்று 1 மணி நேர முதல்வர் ஹோரா கிரகம் ஆவார்!

ஹோரையின் குணங்கள்; செயல்கள்:
சூரிய ஹோரைகள்: (உத்தியோக ஹோரை)
அரசு தொடர்பான காரியங்களில் ஈடுபடுதல், அரசியல் தலைவர்களை சிந்தித்தல், அரசு உதவியைத் தேடல், தந்தை தொடர்பான அனைத்து விஷயங்களும், பெரியோர்களின் ஆதரவைப் பெறுதல், சிவ வழிபாடு, அரசு பதவி ஏற்றல், பிரபலங்களின் தொடர்பு கிடைத்தல், பொதுவாக சூரிய ஹோரையில் அரசு, தந்தை வகையிலான செயல்களை செவ்வனே செய்யலாம்.

சந்திரன் ஹோரை: (அமுத ஹோரை)
1. சந்திரன் துரித கிரகமாகையால் பயணங்களில் விரைவும், வெற்றியும் உண்டாகும் ஹோரையாகும் இது! உணவு பொருட்கள் சம்பந்தமான செயல்கள் செய்தல், திருமண விசயம் பேசலாம், அம்பாள் வழிபாடு செய்தல், மனம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடலாம், "கற்பனையை" மூலதனமாக கொண்ட எந்த ஒரு செயலிலும் ஈடுபடலாம்!
2. எல்லா சுப காரியங்களுக்கும் சந்திர ஹோரையை தேர்ந்தெடுக்கலாம்!
3. அம்மாவசையன்றும், மறுநாள் பிரதமை அன்றும் சந்திர ஹோரையை தவிர்க்கவும்! தேய்பிறை சந்திர ஹோரையை தவிர்ப்பது நலம்!
செவ்வாய் ஹோரை: (ரோகம் தரும் ஹோரை)

1. கடன் வாங்குதல் கூடாது. கடனை திருப்பி கொடுக்கலாம்! எந்த ஒரு காரியமும் செய்ய கூடாது. தடை, தாமதம், விபத்து, ரணகாயங்கள் உண்டாக்கும் ஓரையாகும்! இது ஒரு காரசாரமான சண்டை கலகமூட்டும் கிரக ஒரையாகும்!
2. அனைவரும் அனைத்திலும் உஷார்! செவ்வாய் போர் கிரகம்!
3. புதிய முயற்சிகளை கட்டாயம் தவிர்க்கவும்.

புதன் ஹோரை: (லாபம் தரும் ஹோரை)

1. எழுத்து, பேச்சு, வித்தை ஆரம்பம், கல்வி, படிப்பு, கல்வி தொடர்பான அனைத்து காரியங்களும் இந்த ஓரையில் செய்யலாம்!
2. கதை, கட்டுரை, காவியம், கவி இயற்றுதல் நூல் ஆராய்ச்சி போன்றன்யாவும் புதன் ஓரையில் வெற்றிகரமாக செய்யலாம்!
3. வியாபாரம், தொழில், உத்தியோகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடலாம்!
4. திருமணம் சம்பந்தமான காரியத்தில் துணிந்து செயல்படலாம்!
5. எல்லா சுயகாரியங்களையும் புத ஓரையில் புஷ்டியாக வெற்றியாக செய்யலாம்!
6. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் வெற்றி தரும் ஓரை இது!

குரு ஹோரை: (தன ஹோரை)

1. இது 100% சுப ஒரையாகும்! குரு ஓரையில் எல்லா வகையான சுபகாரியங்களையும் செய்யலாம்!
2. கல்வி, வித்யாரம்பம், ஆலயம் வழிபடுதல், திருமணம் செய்தல், ஆடை ஆபரணம் வாங்க, அணிய சிறந்த ஓரை.
3. எல்லா விதங்களிலும் சுபத்தையும், லாபத்தையும் அளிப்பது குரு ஓரையாகும்!

சுக்கிரன்: (சுகம் தரும் ஓரை)

1. சங்கீதம், ஆடல், பாடல், கற்க, கவி, கட்டுரை, கதை இயற்றுதல், காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபடல், பணம் வாங்குதல், கொடுத்த கடன் வசூல் செய்ய உகந்த ஓரை, பணம் கொடுக்கக் கூடாது!
2. ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், அணிதல், அலங்கார ஆடம்பர பொருட்கள் வாங்குதல், உல்லாச பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுதல், படப்பிடிப்பு தொடக்க விழா (பட பூஜை) செய்தல், கலை அரங்கேற்றம், வங்கிகளில் புதிய Account ஏற்படுத்துதல், (A/c Open பண்ணுதல்).
3. வீடு, வாகனம் கிரயம் பண்ணலாம்!
4. விருந்தினராக செல்லலாம்! பெண் பார்க்க சென்றால் வெற்றி உறுதி!
5. சகல சுபகாரியங்களுக்கு 100% உகந்த ஓரை சுக்கிர ஓரையாகும்!

சனி ஓரை: (சோரம் தரும் ஹோரை)

1. சனி ஓரையில் எந்த ஒரு சுப காரியத்திலும் ஈடுபட கூடாது! மீறி செய்தால் அக்காரியத்தில் தடை, தாமதம், தோல்விகளே ஏற்படும்! 100% அசுபம் உண்டாக்கும்!
2. கண்டங்கள், விபத்துக்கள், பிடிபடுதல், தீயவிளைவுகளை வாரி வழங்குவது சனி ஓரையாகும்! பெரும்பாலான (Accident) வாகன விபத்துக்கள் சனி ஓரையில்தான் நிகழும்! உஷார்!
3. இந்த ஓரையில் ஒரு மூலையில் ஒதுங்கி உட்காருவதே சாலச்சிறந்தது!
4. Switch Off செய்யப்பட்ட மொபைல் மாதிரி ஆகிவிட வேண்டியதுதான்!

சுப ஹோரைகள்: (நைசர்க சுபர்கள்)

1. குரு
2. சுக்கிரன்
3. புதன்
4. சந்திரன்

அசுப ஹோரைகள்: (நைசர்க பாபிகள்)

1. செவ்வாய்
2. சனி

சூரியன் அசுப ஹோரை அல்ல!

கிழமைகளுக்கும் ஹோரா கிரகத்திற்கும் என்ன உறவுமுறை என்பதனை பொருத்தே ஹோரையின் செயல்பாடுகள் அமைகிறது!

ஹோரையின் நுட்பங்கள்:
கிரகங்களின் நட்புகள் (Friends)

சூரியன் = குரு, செவ்வாய், சந்திரன்
சந்திரன் = குரு, செவ்வாய், சனி
செவ்வாய் = குரு, சூரியன், சந்திரன்
புதன் = சுக்கிரன், சனி
குரு = சூரியன், சந்திரன், செவ்வாய்
சுக்கிரன் = சனி, புதன்
சனி = சுக்கிரன், புதன்

கிரக சமம் (Nutral) (No Friends)

சூரியன் = புதன்
சந்திரன் = செவ்வாய்
செவ்வாய் = சுக்கிரன்
புதன் = சூரியன்
குரு = சனி
சுக்கிரன் = செவ்வாய்
சனி = குரு

கிரக பகை விவரம்

சூரியன் x சுக்கிரன், சனி
சந்திரன் x சுக்கிரன், சனி, புதன்
செவ்வாய் x புதன், சனி
புதன் x குரு, சந்திரன், செவ்வாய்
குரு x சுக்கிரன், புதன்
சுக்கிரன் x சூரியன், சந்திரன்
சனி x செவ்வாய், சூரியன், சந்திரன்

குறிப்பு:

வாராதிபனும், ஹோராதிபனும் ஒருவருக்கொருவர் பகையாக இருந்திடில் அந்த ஹோரை சரியாக செயல்படாது!

உதாரணம்:

ஞாயிற்றுக்கிழமை சுக்கிர ஓரை தவறைச் செய்யும்! காரணம் சூரியனும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் பகைவர்கள்.

சூ x சுக்

தோல்வி தரும் கிரக ஓரைகள்:

கிழமைகள் தோல்விகள்
ஞாயிற்றுக் கிழமை சுக்கிர ஓரை தோல்வியை
தரும்.
திங்கள் கிழமை சுக்கிரன், புதன் ஓரைகள்
சரியாக செயல்படாது.
செவ்வாய் கிழமை புதன் ஓரை தோல்வி தரும்.
புதன் கிழமை குரு, சந்திர ஓரைகள் சரியாக
செயல்படாது.
குரு (வியாழன்) சுக்கிர, புதன் ஓரைகள்
கிழமை சரியாக செயல்படாது.
வெள்ளி கிழமை குரு, சந்திர ஓரைகள்
தோல்வி தரும்.
சனிக்கிழமை சந்திர ஓரை தவறை
செய்யும்! உஷார்!

கிழமைகள் ஆகாத ஓரைகள்

ஞாயிறு சுக்கிரன், சனி
திங்கள் சுக்கிரன், புதன், சனி
செவ்வாய் புதன், சனி
புதன் குரு, சந்திரன், செவ்வாய்
வியாழன் சுக்கிரன், புதன், சந்திரன்
வெள்ளி குரு, சந்திரன், சூரியன்
சனி சந்திரன், செவ்வாய், சூரியன்

புதன் கிழமை குரு ஓரை நடக்கும்போது குரு சுப ஓரை என்று எதையும் செய்யலாகாது! இவ்வாறு ஹோரா சாஸ்திரத்தில் இன்னும் பலவித நுணுக்கங்கள், நுட்பங்கள் உள்ளன!! இனி அதையும் கொஞ்சம் பார்க்கலாம்!

கடுமையான பாதிப்பை தரும் கிரக ஓரைகள்:

பாபகிரகங்களின் கிழமைகளில் (ஞாயிறு, செவ்வாய், சனி) பகைவர், பாபிகளின் ஓரைகள் பயங்கரமான பாதிப்புகளை தந்து விடுகிறது!

கிழமை ஓரை
ஞாயிறு x சனி
செவ்வாய் x சனி
சனி x செவ்வாய், சூரியன்

ஞாயிற்றுக்கிழமையில் வரும் சனி ஓரையும், செவ்வாய் கிழமை வரும் சனி ஓரியும் பொல்லாத ஒரையாகும்! இதன் கொடுமையை அனுபவித்தவரிகளிடம் தான் கேட்டறிய வேண்டும்!
சனிக்கிழமையில் சூரிய, செவ்வாய் ஓரைகள் கடுமையான பாதிப்புகளை தந்து விடுகிறது. அதிலும் சனிக்கிழமையில் செவ்வாய் ஓரை மிக கடுமையாக இருக்கும்!

கண்டிப்பாக வெற்றியைத் தரும் ஹோரைகள்:

கிழமைகள் ஓரைகள்
ஞாயிறு சூரியன், புதன், குரு, சந்திரன்
திங்கள் சந்திரன், குரு, சூரியன்
செவ்வாய் குரு, சந்திரன், சுக்கிரன், சூரியன்
புதன் சுக்கிரன், புதன், சூரியன்
வியாழன் குரு, சனி, சந்திரன், சூரியன்
வெள்ளி சுக்கிரன், புதன்
சனி குரு, சுக்கிரன், புதன்

பிறந்த ஹோரை பலன்:

1. ஒருவன் எந்த ஓரை நடக்கும்போது பிறந்தாரோ அதுவே அவரின் ஜென்ம ஒரையாகும்!
2. பிறந்த ஓரை கிரகம் அவருக்கு எப்போதும் நன்மையே செய்யும்!
3. பிறப்பு ஓரை கிரகத்தின் நட்பு கிரக ஓரைகளும் நன்மை செய்யும். பகை ஓரை கிரகங்கள் தீமை செய்யும்.
4. பிறந்த ஓரை கிரக சுபாவகுனம் அச்சாதகரிடத்தில் காணப்படும்.
5. ஒருவர் வெள்ளிக்கிழமை பகல் 2.30 மணிக்கு பிறந்தால் அப்போது நடக்கும் புதன் ஓரையே அவரது பிறப்பு ஒரையாகும். எனவே, புதன் அவருக்கு சுபத்தையே செய்யும்.

சிறப்பு விதிகள்:

1. யாவருக்கும் "ஜென்ம லக்னாதிபதியான" கிரகத்தின் ஓரை எப்போதும் நன்மையே செய்யும்!
2. மேலும் இந்த லக்னாதிபதியின் ஹோரையில் எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றி உறுதி! பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல!
3. யோகி, இந்து லக்னாதிபதியாக வருகின்ற கிரக ஓரைகளும் சுபத்தையே செய்யும்!
4. ஜாதகத்தில் சுபபலம், சுபசாரம் பெற்று நல்ல நிலையில் இருக்கின்ற கிரக ஓரையும் எப்போதும் சுபத்தையே செய்யும்!
5. லக்னத்தின் 6, 18, 12, பாதகாதிபதிகள் ஓரை நன்மை செய்யாது!
6. நீச்சம், அஸ்தமனம், பகை, வக்கிரம் பெற்ற கிரக ஓரைகள் சுபத்தை செய்யாது!
7. தசா புத்தியாக எந்த கிரகமோ! அந்த கிரகங்களின் ஹோரையில், அந்த தசாபுத்தி பலன் நடைமுறைக்கு வருவதை அனுபவத்தில் காணலாம்!
8. உதாரணமாக சூரிய தசை புதன் புத்தி எனில் சூரியன் மற்றும் புதன் ஓரைகளில் பலன்களை எதிர்பார்க்கலாம்! இது நன்மை செய்யும் தசாபுத்தி எனில் நன்மை! தீமை தரும் தசாபுத்தி எனில் அந்த கிழமை, ஓரைகளில் எச்சரிக்கையாக இருந்திடலாம்!
9. சூரிய தசா/புத்தி நடப்பவர்களுக்கு சூரிய ஓரைகளில் தாம் பலன் (+/-)கள் நடக்கும்.
10. சந்திரன் தசா/புத்தி நடப்பில் உள்ளவர்களுக்கு சந்திர ஓரையில் தான் பலன்கள் நடக்கும்.
11. இதே போல மற்ற கிரக தசாபுத்திகளில் அந்த கிரக ஓரைகளில் அதன் பலன்கள் நடைமுறைக்கு வரும்!
12. ராகு தசா/புத்தியில் ராகு நின்ற ராசியாதிபதி கிரக ஓரையிலும் பலன் தரும்!
13. கேது தசா/புத்தியில் கேது நின்ற ராசியதிபதியின் கிரக ஓரையிலும் பலன் தரும்!
14. பிறப்பு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், ராகு, கேது சேர்க்கை பெற்றிருப்பின் சூரியன், சந்திரன் ஓரைகள் சரியாக பலன் தராது!

சுக்கிர ஜெயந்தி : சுகபோக வாழ்வு தரும் சுக்கிரன்

சுக்கிர ஜெயந்தி : சுகபோக வாழ்வு தரும் சுக்கிரன்


 நவக்கிரகங்களில் சுக்கிரன் களத்திரகாரகன். பஞ்சகோண பீடத்தை உடையவர். அசுரர்களுக்கு குருவாக விளங்குபவர். மழை பெய்ய உதவுபவர். திருமணம், களத்திரம் இவற்றிற்கு அதிபதி. பஞ்சபூதங்களில் நீர். அந்தண குலத்தை சேர்ந்தவர். அமிர்த சஞ்சீவி மந்திரத்தின் மூலம் இறந்து போன அசுரர்களுக்கு உயிர் கொடுத்தவர். இவருடைய தசாபுத்திகள் நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும். 29.03.2015, 10.00AM சுக்கிர ஜெயந்தி நாளில் சுக்கிரனை வழிபட்டு அவரது அருள் 
பெறுவோமாக

சுக்கிரபகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அமிர்த சஞ்சீவி என்ற மந்திரத்தை கற்றார். இந்த மந்திரத்திற்கு ஒரு முக்கிய ஆற்றல் இருக்கிறது. அது என்னவென்றால், இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் தரும் ஆற்றல் வாய்ந்த மந்திரம் அது. சுக்கிரபகவானின் நல்ல குணத்தை கண்டுதான் சிவபெருமான் இந்த மந்திரத்தை சொல்லிகொடுத்தார். இவருடைய வாகனம் கருடன். பெருமாளுக்கு உகந்த கருடவாகனம் பெற்றவர். பார்ப்பதற்கு வெள்ளை உருவமாக இருப்பதால் இவர் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறார். திருமால், வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து கொண்ட சுக்கிரசாரியர், மகாபலி சக்கரவர்த்தியிடம், மூன்றடி மண் தரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் மகாபலியோ சுக்கிரனின் பேச்சை கேட்காமல் இருந்ததால் சுக்கிரசாரியர், வண்டாக உருவெடுத்து கமண்டலத்தின் வழியில் நீர் வெளியேற முடியாதபடி அடைத்துக்கொண்டார். இதனால் மகாபலி சக்கரவர்த்தி. கமண்டலத்தின் நீர் வெளியேறும் பகுதியில் தர்ப்பைப்புல்லை விட்டு அடைப்பை நீக்க முயற்சித்தார். இதனால் வண்டின் உருவத்தில் இருந்த சுக்கிரசாரியாரின் ஒரு கண்ணில் தர்ப்பை புல் அடிப்பட்டு சுக்கிரசாரியர் ஒரு கண்பார்வையை இழந்தார். தன் நலத்தைவிட தன்னை நம்பி இருப்பவர்களின் நலமே பெரியதென்று இருக்கும் இவர், உண்மையானவர்நல்ல மனம் படைத்தவர் என்பதை உணர்ந்தார் விஷ்ணுபகவான். இதனால் சுக்கிரபகவானின் மீது மதிப்பு வைத்திருந்தார்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரதசை, இருபது வருடங்கள். இக்காலகட்டத்தில், ஸ்ரீரங்கநாதரை வணங்கினால் சுக்கிரனால் கிடைக்கும் நன்மைகள் தடையின்றி கிடைக்கும். ஒரு வேலை, சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் சரியில்லாமல் இருந்தால், ஸ்ரீரங்கநாதரையும்மகாலட்சுமியையும் வணங்க வேண்டும். பொதுவாக ஜாதகத்தில் சுக்கிரன் சரியில்லாமல் இருந்தால், கலைதுறையில் மேன்மை தராது. அதனால் சுக்கிர தோஷம் இருப்பவர்கள், வெள்ளை தாமரையை லட்சுமி படத்தின் முன்வைத்து வணங்கவேண்டும். வெள்ளி தோறும் நவகிரக சந்நிதியில் இருக்கும் சுக்கிரபகவானின் முன், தாமரை திரி தீபத்தை ஏற்றி சுக்கிரபகவானுக்கு ஆராதனை செய்துவழிபட்டால், கலைதுறையில் ஏறுமுகத்தை காணலாம். வெள்ளிகிழமையில் மொச்சையை வைத்து வணங்கலாம். ஒருபிடி வெள்ளை சாதத்தில் மொச்சையை கலந்து, காக்கைக்கு வைத்து வந்தால் சுக்கிரதோஷம் நீங்கும். முடிந்தால் வெள்ளிதோறும் மொச்சை பருப்பை பத்து பேருக்காவது தானம் கொடுத்தால் இன்னும் பல நன்மைகள் ஏற்படும். வெள்ளிதோறும் சுக்கிர பகவானுக்கு பிடித்த இனிப்பை வைத்து வணங்கினால் ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரதோஷம் நீங்கும். திருமண தடை விலகும். வெள்ளியின் நிறம் வெள்ளை. அது சுக்கிரனின் ஆதிக்கம். சுக்கிரனுக்குரிய வெள்ளியில் செய்த கொலுசை பெண்கள் காலில் அணிந்தால் முகம் பொலிவு பெறும். உடல் வலிமை பெறும். சுக்கிரனை வணங்கி சுபிக்ஷம் பெறுவோம்.


சுக்கிரனை வழிபடும் முறைகள்,

வெள்ளிக்கிழமைகளில் விரத மிருந்து மஹா லட்சுமி தேவிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வெண்மை நிற தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்தல்.

துர்க்கை அம்மனை வழிபாடு செய்தல், துர்க்கா பூஜை செய்தல், ஸ்ரீசரக்ம், தேவிதுதிபாடல்கள், துர்க்கா சாலிஸா போன்றவற்றை பாராயணம் செய்தல்.

6
முகருத்ராட்சை அணிதல். வைரக்கல் பதித்த மோதிரம் அணிவது,

பட்டாடை, மொச்சை பயிர், தயிர், பாலாடை கட்டி, வாசனைப் பொருட்கள், சர்க்கரை,, சூடம், ஆடை, அரிசி போன்றவற்றை வெள்ளியன்று மாலை வேளையில் ஏழைப் பெண்ணுக்கு  தானம் செய்தல்.

வெண்ணிற உடைகள்,கைகுட்டைகள் பயன்படுத்துதல், வெள்ளைமலர்களை சூடுதல், வெள்ளிப் பாத்திரங்களை பயன்படுத்துதல்,

ஓம் தீரம் த்ரிம் ட்ரௌம் சஹ சுக்ர பகவதே நமஹ எனும் பிஜ மந்திரத்தை 40 நாட்களுக்குள் 20000 தடவை அதிகாலையில் பாராயணம் செய்யும்.

பசுவுக்கு அகத்தி கீரை கொடுப்பது நல்லது.

சுக்கிரன் காயத்ரி
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயத்
சுக்கிர வழிபாட்டு முறையை வேதம் வகுத்துத் தந்திருக்கிறது. சுக்கிர சாந்தி என விரிவான வழிபாட்டை சாந்தி ரத்னாதரம் எனும் நூல் விளக்குகிறது. வெள்ளிக்கிழமை, அவனை வழிபட உகந்த நாள். சுக் சுக்ராயநம: என்று சொன்னால் அது மந்திரமாக மாறிவிடும் என மந்திர மஹோததி சொல்கிறது. இந்த மந்திரத்தை 108 முறை மனதுக்குள் சொல்லி வழிபடலாம். சுக்கிரனின் உருவத்தை சும் சுக்ராய நம : எனும் மந்திரத்தால், 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்தி வணங்குவது வளம் தரும். தினமும் அவசரத்துடன் வழிபடுவதை விட, வெள்ளிக்கிழமை தோறும் முழு ஈடுபாட்டுடன் சுக்கிரனை வணங்கி பலன் பெறலாம்.
பகவந்தம் கவிம் சுக்ரம் பிரணதார்த்தி வினாசகம்
ஸர்வகாம பிரதம் வந்தெ பரமானந்த தாயகம்

எனும் ஸ்லோகத்தைச் சொல்லியும் வணங்குங்கள்; வாழ்வு வளம் பெறும்.